அடக்கம் !

அலைந்து கொண்டே இருக்கும் உன் விழிகள் !

அதை காணும் என் விழிகள் துளி கூட அசைவதில்லை !

 

அசைந்து கொண்டே இருக்கும் உன் காதணிகள் !

அதை கேட்கும் என் காதுகள் வேறெதையும் கேட்கவில்லை !

 

உன் மேனியின் வாசத்தில்

என் மூக்கு வேறெதையும்

முகர்வதில்லை!

 

உன் பேச்சில் இன்பம் காணும்

உதடுகள்

வேறொன்றையும்

பேசுவதில்லை!

 

உன் ஸ்பரிசத்தில்

என் உடலின் இயக்கம்

சற்று நின்றுதான்

விடுகிறது !

 

உன் அழகில்,

அலைந்து கொண்டே இருக்கும்

என் மனம் கூட

அசையாமல் தவம் இருக்கிறது!

 

இதை காதல் மயக்கம் என்று

சொல்பவர்கள் சொல்லட்டும்!

 

ஆனால் இப்படி ஐம்புலன் அடக்கம்

உன்னால் சித்தித்து

விடுகிறது,

எந்த சாதனையும் இன்றி !

 

75
admin

admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
தமிழடிமை
தமிழடிமை
8 months ago

ஸ்பரிசத்தை அடுத்து ஐம்புலன்களும் தம்மை பறக்கும். விரக தாபம் பொல்லாத உணர்வு. கவிதை நன்று.

தமிழடிமை
தமிழடிமை
8 months ago

மறக்கும்

error: தயவு செய்து வேண்டாமே!!
2
0
Would love your thoughts, please comment.x
()
x